தலைமை செயலக விவகாரம்: டெல்லிக்கு குழுவை அனுப்ப தமிழக அரசு திட்டம்
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு இடைஞ்சலாக மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் டி.ஆர். பாலுபிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக பிற மாநில முதல்வர்களின் ஆதரவைத் திரட்டவும், நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
ரூ. 50 கோடிக்கு அதிகமான மதிப்பில் கட்டடம் கட்டினாலோ, ஆயிரம் பேர் மேல் வேலை செய்யும் இடத்தைக்கட்டினாலோ மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என பாலு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடை செய்யவே பிறக்கப்பட்டதாக தமிழக முதல்வர்ஜெயலலிதா கருதுகிறார். இதற்கு எதிராக மற்ற மாநில அரசுகளின் ஆதரவைப் பெற ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.
இந்த உத்தரவால் மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படும் என்று ஹை-லைட் செய்து பிற மாநிலமுதல்வர்களுக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளார். ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதை எதிர்த்து பாரம்பரியகட்டடங்கள் பாதுகாப்பு உத்தரவை பாலு பிறப்பித்தபோதும் இதே போன்ற கடிதத்தை ஜெயலலிதா அனைத்துமாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
பாலுவின் உத்தரவுக்கு மத்திய அரசிடம் நேரில் எதிர்ப்பு தெரிவிக்க உயர் அதிகாரிகள் குழுவை டெல்லிக்குஅனுப்பவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
அதே நேரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கான வரைபடத்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின்ஒப்புதலுக்கு அனுப்புவது என்றும் பாலு அனுமதி தராவிட்டால் நீதிமன்றத்தை நாடுவது என்றும் ஜெயலலிதாதிட்டமிட்டுள்ளார்.
பாலுவின் உத்தரவுக்கு இடைக்கால நீதிமன்றத் தடையையப் பெற்று விட்டால், வழக்கின் விசாரணையைமுடிப்பதற்குள் புதிய தலைமைச் செயலகக் கட்டுமானப் பணியை தொடங்கிவிட முடியும் என முதல்வர்கருதுவதாகத் தெரிகிறது.
டி.ஆர். பாலுவின் உத்தரவை எதிர்ப்பதில் ஜெயலலிதாவுக்கு ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் முழு ஆதரவுதெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பட்நாயக்கின் கட்சி மத்திய அமைச்சரவையிலும் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications