அரசு ஊழியர்களிடம் விசாரணை: நாளை அரசிடம் அறிக்கை தாக்கல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதிகள் நாளை அரசிடம் அறிக்கைதாக்கல் செய்கின்றனர்.

நிறுத்தப்பட்ட சலுகைகளை வழங்கக் கோரி கடந்த ஜூலை மாதம் 2ம் தேதி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும்வேலைநிறுத்தத்தில் இறங்கியதையடுத்து அரசு அதிரடி நடவடிக்கையாக சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம்ஊழியர்களை ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்தது.

உச்ச நீதிமன்றம், பணி நீக்கம் மற்றும் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட 6,072 ஊழியர்களிடம் விசாரணை நடத்தஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளான சமபத், தங்கவேலு, மலைசுப்பிரமணியன் ஆகிய 3 பேரை நியமித்தது.

இவர்கள் கடந்த 2 மாதமாக 5,700 பேரிடம் விசாரணை நடத்தினர். மற்றவர்கள் விசாரணைக்கு வரவில்லை.

விசாரணையில் ஊழியர்கள் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் நீதிபதிகள் அறிக்கை தயாரித்தனர்.அவ்வறிக்கையை நீதிபதிகள் நாளை அரசிடம் அளிக்க இருக்கிறார்கள்.

இந்த அறிக்கையைப் பொறுத்தே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா என்பதுதெரிய வரும். இந்த அறிக்கையின் மீது அரசு இம்மாத இறுதிக்குள் முடிவெடுக்கும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+