காமராஜரா? அண்ணவா?: கருணாநிதி Vs

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் காரணம் காமராஜர்தான் என்று ப.சிதம்பரம் பேசியதால்தான், அதை விமர்சித்துபதிலளிக்க நேரிட்டது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் மற்றும் கோபண்ணா ஆகியோர்எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா நடந்தது.

இதில் ப.சிதம்பரம் பேசுகையில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட காமராஜரே காரணம்என்று கூறியிருந்தார். இதற்கு விழாவிலேயே கருணாநிதி பதிலும் அளித்தார். இதற்குக் காரணம் அண்ணா தான்என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும் விழா மேடையிலேயே ப.சிதம்பரத்தை, வெண்ணையில் ஊசி நுழைப்பவர் என்று கருணாநிதிகுறிப்பிட்டார்.

இதனால் ப.சிதம்பரத்தை விமர்சிக்கும் வகையில் கருணாநிதி பேசியதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இச்சம்பவம் குறித்து, குத்தல் பேச்சு மூலமாக கருணாநிதி பல நண்பர்களை இழந்து வருகிறார் என விகடனுக்குஅளித்துள்ள பேட்டியில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இந் நிலையில் இந்த விவகாரத்துக்கு இன்று கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக முரசொலியில்அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

ப.சிதம்பரம் தெரிவித்த கருத்தை மேடையில் இருந்த நான் மறுக்காமல் விட்டிருந்தால் அது வரலாற்று பிழையாகிவிடும் என்பதால்தான் அப்போதே பதிலளிக்க நேரிட்டது.

1967ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி சட்டசபையில், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர்சூட்டுவது தொடர்பான தீர்மானத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் முன் மொழிந்தார்.

உண்மை இப்படியிருக்க காமராஜர்தான் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்படக் காரணம் என்று வரலாற்றுப்பிழையான செய்தியை ப.சிதம்பரம் கூறினார். இதன் மூலம் காமராஜர் போன்ற பெரிய மனிதர்களை வம்புக்குஇழுக்கலாமா என்பதை சுட்டிக் காட்டவே அன்றைய தினம் சிதம்பரத்தின் பேச்சை மறுத்துப் பேச நேரிட்டது என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+