புதிய தலைமைச் செயலகம்: அவசரம் கூடாது- மத்திய அரசு
டெல்லி:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் மாநில அரசுகள் அவசரம் காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் 43 ஏக்கர் பரப்பளவில் ரூ.450 கோடி செலவில் புதிய தலைமைச்செயலகம் கட்டத் தீர்மானித்து அதற்கான அடிக்கல்லை கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா நாட்டி, பூமிபூஜையும் நடத்தினார்.
இந்த பூஜை நடப்பதற்கு இரு தினங்களுக்கு முன் மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் பாலு ஒரு உத்தரவைப்பிறப்பித்தார்.
அதன்படி ரூ.50 கோடிக்கு அதிகமான நிதியிலும், 1,000 பேருக்கு மேல் வேலை செய்யும் வகையிலும், தினமும் 50ஆயிரம் லிட்டர் கழிவு நீரை வெளியேற்றும் வகையிலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு மத்திய சுற்றுச் சூழல் துறையின்முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நகர்ப் பகுதிகளில் ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் மோசமடைந்து வருவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றஉத்தரவுப்படி இந்த உத்தரவு வெளியிடப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாசடைந்த யமுனை நதியின் தூய்மைக் கேடு தொடர்பான வழக்கு கடந்த 1991ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில்நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு நிலுவையில் இருந்தாலும், மத்திய சுற்றுச் சூழல் துறை வெளியிட்டபுதிய உத்தரவுக்கான வரைவறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரிஸ் சால்வே,சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மாநில அரசுகள் முன் வர வேண்டும் சில மாநில அரசுகள் மத்திய அரசின் அனுமதிபெறாமல் ரூ.50 கோடிக்கு அதிகமான நிதியில் கட்டிடம் கட்டுகின்றன. இந்த விஷயத்தில் மாநில அரசுகள் அவசரம்கூடாது என்றார்.