For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

1,000 பவுன் நகைகளுடன் அடகுக்கடைக்காரர் எஸ்கேப்

By Staff
Google Oneindia Tamil News

திெருப்பூர்:

1000 பவுன் நகைகளுடன், அடகுக் கடை நடத்தி வந்தவர் தலைமறைவானதால் திருப்பூரில் பெரும் பதற்றம்ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் ராம்நகர் மற்றும் அவிநாசி சாலை ஆகிய பகுதிகளில் அடகுக் கடை நடத்தி வந்தவர் பொன்விஜயன்.இவரது கடைகளில் ஏராளமானோர் நகைகளை அடகுக்கு வைத்திருந்தனர். அவற்றை மீட்க சிலர் பணம்கொடுத்திருந்தனர்.

இந் நிலையில் கடந்த சில நாட்களாக கடைகள் பூட்டப்பட்டுள்ளன.இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். கடைகளில் சுமார் 1000 பவுன் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதவிர பலர் தங்களது நகைகளைத் திருப்புவதற்காக ஏராளமான பணத்தையும் கொடுத்து வைத்திருந்ததாகத்தெரிகிறது. மொத்தத்தில் ரூ. 50 லட்சம் அளவுக்கு நகை, பணத்துடன் பொன்விஜயன் தலைமறைவாகி விட்டதாககூறப்படுகிறது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X