For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி விமான நிலைய ம்ேபாட்டுப் பணிகள் தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

ஓடுபாதையின் நீளத்தை அதிகப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் உள்ளிட்ட விமான நிலைய வளர்ச்சிப் பணிகள்டிசம்பர் 2004ல் முடிவடையும் என்று விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.

விமான நிலையத்தில் நிர்வாக ஒழுங்கை மேம்படுத்தவும், ஒழுங்கீனங்களைக் களையவும் ஏற்பாடு செய்யப்பட்டஒரு வார கால விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட அவர் இது பற்றிக் கூறியதாதவது:

மேற்கண்ட பணிகளுக்காக ரூ.25 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த வேலைகள் டிசம்பர் மாதஇறுதிக்குள் தொடங்கிவிடும். இரண்டாம் கட்டப் பணிகளுக்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு பல்வேறுதுறைகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

புதிய கட்டடங்களைக் கட்டுதல், மேலும் ஐந்து விமானங்களை நிறுத்தும் அளவிற்கு விமான தளத்தை விரிவாக்கல்,பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித் தருதல் முதலான பணிகள் இரண்டாம் கட்ட திட்டத்தில் அடங்கும்.இதுவும் ரூ.25 கோடி மதிப்பிலான திட்டமாகும்.

தற்போது 46 லட்ச ரூபாய் செலவில் சுற்றுச் சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 கோடி ரூபாய் செலவில்விமானங்களைத் தரையிறக்க உதவும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X