ஆசிரியை திட்டியதால் 4ம் வகுப்பு மாணவி தற்கொலை
கோவை:
ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த 9 வயது மாணவி உடலில் மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துக் கொண்டாள்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவள் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
கோவை, சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். கூலித் தொழிலாளியான இவரது மகள் கிருத்திகா,அருகே உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று பள்ளிக்குச் சென்ற கிருத்திகா, ஆசிரியை மரகதம் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, பாடத்தைக்கவனிக்காமல் அருகில் இருந்த மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து ஆசிரியை,கிருத்திகாவைத் திட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த கிருத்திகா, மாலையில் வீட்டிற்கு வந்ததும் உடலில் மண்ணெண்ணைய் ஊற்றித் தீ வைத்துக்கொண்டாள். இதில் படுகாயம் அவளை அக்கம் பக்கத்தினர் அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை கிருத்திகா பரிதாபமாக இறந்தாள்.
இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக் கல்வித்துறைஅதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.