For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் நிறுத்தம் தொடரும்: கதிர்காமர்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் செயல்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையானநடவடிக்கையை உரிய நேரத்தில் எடுப்போம் என்று புலிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே புலிகளுடன் ரணில் அரசு செய்து கொண்ட போர் நிறுத்தம் தொடரும் என சந்திரிகாவின் பாதுகாப்புஆலோசகர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

பாதுகாப்பு அமைச்சகத்தின் செயல்பாட்டை அதிபர் தன் வசம் எடுத்துக் கொண்டாலும், போர் நிறுத்த உடன்பாடுமுழுமையாக அமலில் இருக்கும் என்று அதிபர் திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் போரைத் தொடங்கும் எந்தமுயற்சியிலும் அரசு ஈடுபடாது. அப்படிப்பட்ட எண்ணமும் சந்திரிகாவுக்கு இல்லை.

கடந்த 18 மாதங்களாக நாட்டின் சட்டம்-ஒழுங்கு தொடர்ந்து சீர்குலைந்து வந்ததால் தான் இந்த நடவடிக்கையைஎடுக்க வேண்டிய நிலைக்கு சந்திரிகா தள்ளப்பட்டார் என்றார்.

நேற்று தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் சந்திரிகா, புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத்தொடர தயாராகவே இருப்பதாக கூறினார். அதே நேரத்தில் திரிகோணமலையில் விடுதலைப் புலிகள்ஆயுதங்களைக் குவித்து வருவதை ரணில் அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது. மேலும அமைதிஒப்பந்தத்தை புலிகள் மீறியபோதெல்லாம் அதையும் ரணில் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

ஆனால், அவரது செயல்களால் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பங்கம் ஏற்படும் என்றே புலிகள் கருதுகின்றனர்.இந் நிலையில் அரசின் செயல்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக புலிகள் கூறியுள்ளனர். மேலும்போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்தும் ஆலோசித்துவருகின்றனர்.

இந் நிலையில் புலிகள் அனைவரும் தங்களது முகாம்களுக்குத் திரும்புமாறு அதன் தலைமை உத்தரவிட்டுள்ளது.இதனால் எதையும் எதிர்கொள்ள புலிகளும் தயாராவதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X