விடுதலைப்புலிகள் திட்டத்தை ஏற்கவேண்டும்: ரணிலுக்கு ராமதாஸ் கோரிக்கை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள இடைக்கால நிர்வாகம் தொடர்பான திட்டத்தை ஏற்று இலங்கையில் அமைதிதிரும்ப உதவ வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில்,
இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள திட்டத்தை ஏற்று தமிழர்பகுதிகளில் அமைதி திரும்பவும், தமிழர் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், இலங்கை அரசு நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
எனவே, விடுதலைப் புலிகள் கொடுத்துள்ள திட்டத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்என்று ராமதாஸ் எழுதியுள்ளார்.












Click it and Unblock the Notifications