15 வயது மாணவியை கர்ப்பிணியாக்கிய 17 வயது மாணவர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை காதலித்து,கர்ப்பமாக்கிய17 வயது மாணவன் கைது செய்யப்பட்டான்.
கூவத்தூர் அருகே உள்ள நாவாக்கல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ரேகா. இவர் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் ராமதாஸ். இருவரும் காதலித்தனர். இதன் விளைவாக ரேகாகர்ப்பமுற்றார்.
இதையடுத்துத் தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு ராமதாஸை வற்புறுத்தியுள்ளார் ரேகா. ஆனால்முடியாது என்று மறுத்து விட்டார் ராமதாஸ். இதையடுத்து ரேகா கூவத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ராமதாஸைப் போலீஸார் கைது செய்தனர். 18 வயதுக்குட்பட்டவராக இருந்ததால், ராமதாஸைசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறு திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications