டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெ.வுக்கு நாயுடு ஆதரவு
சென்னை:
ரூ. 50 கோடிக்கு மேல் கட்டடங்கள் கட்டும்போது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்திற்கு, ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு பதில் அனுப்பியுள்ளார்.
அதில் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் இந்த அரசாணை குறித்து மத்திய அரசுக்குக் கடிதம்எழுதுவதாக நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வெளியிட்ட அரசாணையில், நகர்ப் புறங்களில்ரூ. 50 கோடிக்கு மேலான கட்டடங்களைக் கட்டுவதற்கு முன், சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெறவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் தலைமைச் செயலக கட்டுமானப் பணிகளை தடுக்கும் விதமாகவே இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆணையை எதிர்க்கக் கோரி அனைத்து மாநில ணிதல்வர்கள், யூனியன் பிரதேச ஆளுநர்களுக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
அதற்கு சந்திரபாபு நாயுடுவும் அந்தமான், நிக்கோபார் துணை நிலை ஆளுநர் ஷாவும் பதில் அனுப்பியுள்ளனர்.
நாயுடு எழுதியுள்ள பதிலில், இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவுள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications