மத்தியில் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத அரசை அமைக்க முயல்வேன்: ஜெயலலிதா
சென்னை:
அடுத்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியின் ஆட்சியைஅமைக்க முயற்சி செய்வேன் என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாதஅரசு ஆட்சிக்கு வர வேண்டும், அதற்கு இடதுசாரிக் கட்சிகள் உதவ வேண்டும் என்றார்.
சட்டமன்றத்தில் இன்று காவிரி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎம்.எல்.ஏவான ஹேமச்சந்திரன். கர்நாடகத்தில் இருந்து நீரைப் பெற தமிழக அரசு முயற்சி எடுக்கவில்லை எனஅவர் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது:
காங்கிரஸ், பா.ஜ.க, ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்றவும் ஆட்சியைக்காப்பாற்றவும் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஓட்டுக்களை மனதில் வைத்து அவைகர்நாடகத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
தமிழகத்தில் அந்தக் கட்சிகளுக்கு ஆதரவு இல்லை. இதனால், காவிரி விவகாரத்தில் தமிழகத்தை அவைபுறக்கணிப்பதோடு, அநீதியும் செய்து வருகின்றன.
காவிரி ஆணையத்தைக் கூட்டக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு பலமுறை கடிதம் எழுதியும் பலன் இல்லை. உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் ஆகியவற்றை நம்பித்தான் தமிழகம் உள்ளது. வேறு யாரையும் (வாஜ்பாய்) நம்பிநாங்கள் இருக்கவில்லை. இது தொடர்பாக நான் பிரதமரையே கண்டித்தேன். இதனால் உச்ச நீதிமன்றத்திலும் பதில்சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.
அதே நேரத்தில் யாருடைய பேச்சையும் கேட்க முடியாது, எந்த நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்க முடியாது என்றுகர்நாடகம் பிடிவாதமாக உள்ளதால்தான் காவிரிப் பிரச்சினைக்கு தீர்வ காண முடியவில்லை.
ஓட்டு வங்கிக்காக அரசியல் நடத்தும் பா.ஜ.க., காங்கிரஸ், ஜனதாதளம் ஆகியவை மத்தியில் ஆட்சிக்கு வரக்கூடாது. அவை இல்லாத புதிய கூட்டணி ஆட்சிக்கு வந்தால்தான் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும், நீதிகிடைக்கும். இதனால் பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு மத்தியில் உருவாக வரும் மக்களவைத்தேர்தலுக்குப் பின் நான் முயற்சி எடுப்பேன்.
அதிமுக மற்றும் பிற கட்சிகளின் இந்த முயற்சிகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்றார்.
ஆனால் அடுத்துப் பேசிய ஹேமச்சந்திரன், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு வேண்டும் என்று முதல்வர்விரும்பினால், முதலில் மக்கள் விரோத கொள்கைகளை அதிமுக அரசு கைவிட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications