தமிழக போக்குவரத்து கழகத்துக்கு ஹை-டெக் பஸ்கள் வாங்க திட்டம்
சென்னை:
தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு அதி நவீன சொகுசு பஸ்கள் வாங்கப்பட உள்ளதாகபோக்குவரத்துறை அமைச்சர் விஸ்வநாதன் தெரிவித்தார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சிவபுண்ணியம், அரசுப் பேருந்துகள் மிகமோசமான நிலையில் உள்ளதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். பழைய பேருந்துகள் மாற்றப்பட்டு புதியபேருந்துகள் விடப்படுமா என்று கேட்டார்.
இதற்கு அமைச்சர் விஸ்வநாதன் பதிலளிக்கையில், நிதி நிலையைப் பொறுத்து, தேவைக்கேற்ப புதிய பேருந்துகள்வாங்கி விட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். மேலும் 600 புதிய பேருந்துகள் வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்.அதி நவீன ஹைடெக் ஏர்பஸ்களை வாங்கவும் முடிவு செய்துள்ளோம் என்றார்.
வணிகவரி: ரூ. 10,200 கோடி வசூல்
முன்னதாக வணிகவரித்துறை அமைச்சர் வேலுச்சாமி பேசுகையில், இந்த ஆண்டு வணிகவரி ரூ.10,200 கோடிவசூலாகியுள்ளது என்று தெரிவித்தார்.