வகுப்பறையில் விபரீதம்: ஜெலாட்டின் குச்சிகள் வெடித்து மாணவன் முகம் சிதறல், விரல்கள் துண்டாயின
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் ஜெலாட்டின் குச்சிகளை வகுப்பறைக்கு எடுத்து வந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுவன், அந்தக்குச்சிகள் வெடித்துச் சிதறியதில் படுகாயமடைந்தான்.
அவன் முகம் சிதறிப் போனது. வாய் கிழிந்தது. கை விரல்கள் துண்டாகி வகுப்புக்கு வெளியே போய் விழுந்தன.அவனது ஒரு காலும் பலத்த சேதமடைந்துள்ளது.
ஜெலாட்டின் குச்சிகள் வெடித்தபோது எழுந்த பயங்கர அதிர்வால் ஆசிரியரும், மாணவர்களும் தூக்கிவீசப்பட்டனர். சிலர் மயக்கமடைந்தனர்.
மாலூர் அருகே உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் இன்று காலை இச் சம்பவம் நடந்தது. இங்கு 8ம் வகுப்புபடித்து வந்த அந்த மாணவன் கையில் ஜெலாட்டின் குச்சிகள் எப்படி வந்தன என்று தெரியவில்லை.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications