டெஸ்மா வழக்கு: இளங்கோவனுக்கு கோர்ட் சம்மன்
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் தூண்டி விட்டதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், சென்னை எழும்பூர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கூறி காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசெயலாளர் வரதராஜன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோது அதைத் தூண்டி விடும் வகையில் பேசியதாகவும், அறிக்கைகள்விட்டதாகவும் கூறி திமுக தலைவர் கருணாநிதி, இளங்கோவன், வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர்நல்லகண்ணு ஆகியோர் மீது எழும்பூர் கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் டெஸ்மா சட்டத்தின் கீழ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் அக்டோபர் 31ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையைநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் தற்போது இளங்கோவன் 24ம்தேதியும், வரதராஜன் 25ம் தேதியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறி சம்மன் அனுப்பஉத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications