ரூ. 1 கோடி பணம்: ஜனனியின் சொத்தை விற்றுக் கிடைத்தது- கபில்சிபல்
சென்னை:
திருநெல்வேலியில் உள்ள பூர்வீகச் சொத்தை விற்றுக் கிடைத்த பணம்தான் ஜனனி வீட்டில் கைப்பற்றப்பட்ட சுமார்ரூ. 1 கோடி என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.
கஞ்சா வழக்கில் கைதாகியுள்ள ஜனனி, தாயார் ரமீஜா மற்றும் கார் டிரைவர் சதீஷ் ஆகியோர் ஜாமீன் கோரிசென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கற்பக விநாயகம் முன் நடந்து வருகிறது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் நடந்த விசாரணையின்போது ஜனனியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ரூ. 1 கோடி பணம்எப்படி வந்தது?, ஜனனி உண்மையிலேயே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினாரா?, ஜனனிக்குப் பாதுகாப்பு கோரிஆளுநருக்கு பேக்ஸ் செய்தி அனுப்பிய கந்தசாமி யார்? என்ற கேள்விகளை எழுப்பினார் நீதிபதி.
இதற்கு ஜனனியின் வழக்கறிரான கபில்சிபல் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜபரான கபில்சிபல், ஜனனியின் வீட்டில் கிடைத்த பணம் அவரதுதிருநெல்வேலி பூர்வீகச் சொத்தை விற்றுக் கிடைத்த பணமாகும்.
சென்னையில்தான் ஜனனி ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதினார். கந்தசாமி என்பவர், ஜனனியின் குடும்ப நண்பர் ஆவார்என்று கூறினார்.
விசாரணை பிற்பகலிலும் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனி கைதானவுடன் அவரது உயிருக்கு பாதுகாப்புக் கோரி ஆளுநருக்கு, கந்தசாமி என்ற பெயரில் நடராஜன்தான் பேக்ஸ் அனுப்பியதாக யூகங்கள் உள்ளன. மேலும் பணமும் நடராஜன் மூலமே ஜனனிக்குக் கிடைத்தாகவும்பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.