பாதை தெரியாமல் தடுமாறுகிறது திமுக: ஜெயலலிதா கிண்டல்
சென்னை:
எந்தப் பாதையில் போவது என்று தெரியாமல் பெரும் ஊசலாட்டத்தில் இருக்கிறது திமுக என்று முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் மதுவிலக்கு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்திற்குப் பதில் அளித்துப் பேசுகையில், திமுகவைத்தாக்கினார் ஜெயலலிதா.
அவர் கூறுகையில், மது விலக்குக் கொள்கையில் அரசு தடுமாறுவதாகவும், ஊசலாடுவதாகவும் எதிர்க்கட்சிகள்குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் யார் உண்மையில் தடுமாறுகிறார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
எந்தப் பாதையில் போவது என்று தெரியாமல் தமிழக அரசியலில் யார் தடுமாறுகிறார்கள், ஊசலாடுகிறார்கள்என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அவர்களது பாதையில் போக முடிவு செய்தால், நிச்சயம் தோல்விதான்என்பதையும் மக்கள் அவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
மதுக் கொள்கையில் அரசு தள்ளாடுவதாக ஒரு தலைவர் (கருணாநிதி) கூறுகிறார். ஆனால் உண்மையில் மதுவுக்குதமிழக இளைஞர்களை அடிமையாக்கி தள்ளாட விட்டவர் அவர்தான். அவரது பதவிக் காலத்தில்தான் (1972ம்ஆண்டு) முதன் முதலாக மது விலக்கு தளர்த்தப்பட்டு மது தாராளமாக கிடைக்க வகை செய்யப்பட்டது.
இளைஞர்களை மட்டும் அவர் தள்ளாட விடவில்லை. மாநிலத்தின் நிதி நிலையையும் ஆட்டம் காண வைத்துவிட்டார் அந்தத் தலைவர். நான் முதல்வராகப் பதவியேற்றபோது அரசின் நிதி நிலை கோமா நிலையில் இருந்தது.எனது தீவிரமான முயற்சிகளின் காரணமாக இப்போது அது சாதாரண நிலைக்கு வந்து கொண்டுள்ளது என்றார்ஜெயலலிதா.