ஜெ. ஆட்சியின் தள்ளாட்டமும், தடுமாற்றமும்: கருணாநிதி
சென்னை:
மது விலக்குக் கொள்கையில் தள்ளாட்டமும், தடுமாற்றமும் எந்த ஆட்சியில் இருந்தது என்பதை ஜெயலலிதா அரசுவிளக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில்தான் மது விலக்கு ரத்து செய்யப்பட்டதாகஜெயலலிதா கூறியுள்ளார். ஆனால் மது விலக்குக் கொள்கையில், தள்ளாட்டம், தடுமாற்றம் யாருக்கு, எந்தஆட்சிக்கு என்பதை பின்னோக்கிப் பார்த்தாலே தெரியும்.
கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா அரசு பதவிக்கு வந்தபோது, திமுக ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தப்பட்டமலிவு விலை மது, பாவகரமான செயல் என்று கூறி ஜெயலலிதா ரத்து செய்தார்.
பின்னர் 2002ம் ஆண்டில் மீண்டும் மலிவு விலை மதுவை கொண்டு வந்தார். ஆனால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாககூறி 2 மாதங்களிலேயே மலிவு விலை மதுவை நிறுத்தி விட்டார்கள்.
அதேபோல, 1999ம் ஆண்டு மதுக் கடைகளில் பார் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டது. அடுத்த ஆண்டே அதற்குதடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முதல் மீண்டும் பார் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
இப்போது அரசே மதுக்கடை நடத்தும் என்கிறார்கள்.
இது மது விலக்குக் கொள்கையால் ஏற்பட்ட தள்ளாட்டமா, தடுமாற்றமா என்பதை ஜெயலலிதா விளக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications