ரணிலுக்கு முஸ்லீம் கட்சி ஆதரவு
கொழும்பு:
நெருக்கடி நிலைப் பிரகடனமாகியுள்ள நிலையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கை ஆதரிப்பதாகமுஸ்லீம்கள் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராப் ஹக்கீம் கூறுகையில், ரணில் தலைமையிலான அரசு மீதுஎங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே எங்களது ஆதரவு அவருக்கு உண்டு என்றார்.
இலங்கை சிறுபான்மை இனத்தவரில் 18 சதவீத தமிழர்களுக்கு அடுத்தபடியாக, 8 சதவீத முஸ்லீம்கள் உள்ளனர்.
முஸ்லீம் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, ரணில் கட்சியுடன்கூட்டணி அமைத்தது.
அதன் காரணமாக 2 வாக்கு வித்தியாசத்தில் ரணில் ஆட்சியமைக்க முடிந்தது. ஹக்கீமும் துறைமுகத்துறைஅமைச்சரானார். புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமிக்கப்பட்ட அரசுத் தூதுக் குழுவில் ஹக்கீம் இடம்பெற்றிருந்தார்.
தற்போது அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரணிலுக்குத் தங்களது ஆதரவு தொடரும் என்றுமுஸ்லீம்கள் கட்சி அறிவித்துள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications