காமராஜர் படிக்கச் சொன்னார்; ஜெ. குடிக்கச் சொல்கிறார்: சோ.பா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுக் கடைகளை தானே நடத்தவும், அதை நள்ளிரவு 12 மணி வரையிலும் திறந்து வைக்கவும் தமிழக அரசு முடிவுசெய்துள்ளதன் மூலம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் ஜெயலலிதா அரசு துரோகம் இழைத்து விட்டதாககாங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நள்ளிரவு 12 மணி வரையிலும் மதுக்கடைகள் திறந்திருக்கலாம் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. மேலும் கிராமம் தோறும் மதுக் கடைகளைத்திறக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரசின் இந்தத் திட்டம் மிக சோகமான, கொடுமையான ஒரு முடிவு. இதன்மூலம் இளைஞர்களுக்கும்,பெண்களுக்கும் ஜெயலலிதா மிகப் பெரிய துரோகத்தை இழைத்திருக்கிறார்.
பெருந் தலைவர் காமராஜர் இளைஞர்களை படிக்கச் சொன்னார். ஆனால் ஜெயலலிதாவோ குடிக்கச் சொல்கிறார்என்றார் சோ.பா.












Click it and Unblock the Notifications