சந்திரிகா நடவடிக்கை: வைகோ கடும் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கை அமைதி நடவடிக்கைகளை குலைக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று அதிபர்சந்திரிகாவுக்கு, இந்தியா அறிவுரை கூற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காவல் நீட்டிப்புக்காக வேலூர் சிறையிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட வைகோ, முதலாவது கூடுதல்செஷன்ஸ் நீதிபதி தேவதாஸ் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சிறந்த தீர்வு உண்டாகும் சூழ்நிலைஏற்பட்டுள்ளபோது அதிபர் சந்திரிகா, அதைக் குலைக்கும் விதமாக நடந்து கொள்வது கண்டனத்துக்குரியது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சந்திரிகாவுக்கு இந்தியா அறிவுரை வழங்க வேண்டும்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் அமைதி முயற்சிகளுக்கு இந்தியா முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றுகூறினார் வைகோ.












Click it and Unblock the Notifications