For Daily Alerts
Just In
வீரப்பனுடன் சண்டை நடக்கவில்லை: தமிழகம் மறுப்பு
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பனுடன், தமிழக காட்டுப் பகுதியில் சண்டை ஏதும் நடக்கவில்லை என்று தமிழக கூடுதல்டிஜிபி நடராஜ் தெரிவித்துள்ளார்.
சத்தியமங்கலம் அருகே தமிழக காட்டுப் பகுதியில் வீரப்பனை அதிரடிப்படையினர் முற்றுகையிட்டுள்ளதாகவும்,விரைவில் அவன் பிடிபடுவான் என்றும் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருந்தார்.
ஆனால் இந்தத் தகவல்களை தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி நடராஜ் மறுத்துள்ளார். சத்தியமங்கலத்தில்உள்ள தமிழக அதிரடிப்படை தலைமை முகாமில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக காட்டுப் பகுதியில்சண்டை ஏதும் நடக்கவில்லை. வீரப்பன் கர்நாடக காட்டுப் பகுதிக்குள்தான் இருக்க வேண்டும்.
வீரப்பனைப் பிடிக்க தொடர்ந்து தீவிர வேட்டை நடந்து வருகிறது. தமிழக எல்லைப் பகுதியில் அதிரடிப்படைவீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
Comments
Story first published: Thursday, November 6, 2003, 5:30 [IST]