தலித் பஞ்சாயத்துகள் விவகாரம்: பேச சபாநாயகர் அனுமதி மறுப்பு- திருமாவளவன் வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கீரிப்பட்டி, பாப்பாபட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துகளில் தேர்தல் நடத்துவதில் உள்ள ஜாதிரீதியானபிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப அனுமதி மறுக்கப்பட்டதால் விடுதலைதச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்திருமாவளவனும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயக்குமாரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினர். அப்போது இடைமறித்த சபாநாயகர் காளிமுத்து,இன்று அவையில் 10 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளதால், இந்தப் பிரச்சனை பற்றிப் பேச காலஅவகாசமில்லை என்றார்.

இன்று தான் சட்டமன்றக் கூட்டத் தொடரின் கடைசி நாள் என்பதால் இன்றே மசோதாக்களை நிறைவேற்றியாகவேண்டும் என்றார்.

இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த திருமாவளன் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். அதே போலஜெயக்குமாரும் வெளியேறினார்.

வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம்,கொட்டகச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களில் நீண்ட காலமாக தேர்தல் நடத்தப்பட முடியாமல் உள்ளது.இது குறித்துப் பேச முயன்றால் சபாநாயகர் அனுமதி மறுக்கிறார்.

தலித்கள் தங்களது குறைகளை சட்டசபையில் சொல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்குஎதிரான உயர் ஜாதி சக்திகளை அதிமுக அரசு வளர்த்து விடுகிறது, அவர்களை தலித் மக்களுக்கு எதிராக அரசேதூண்டி விடுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+