ஜெ.வின் ஆசை நிறைவேற உதவ மாட்டோம்: மார்க்சிஸ்ட்
கோயம்புத்தூர்:
அதிமுகவுடன் எந்த ஒரு தேர்தல் கூட்டணியும் வைக்கப்பட மாட்டாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதிட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கூட்டணி அமைக்கும் தனது முயற்சிக்கு இடதுசாரிக் கட்சிகளின்ஆதரவு தேவை என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந் நிலையில் கோவையில் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன்,
ஜெயலலிதா தலைமையிலான அரசு பொது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவருகிறது.உரிமைகளுக்காகப் போராடிய மாநில அரசு ஊழியர்களைக் குற்றவாளிகளாக்கி அலைக்கழித்து வருகிறது.
இப்போது மத்திய அரசு ஊழியர்களையும் அந்த நிலைக்கு ஆளாக்க முயல்கிறது போலும். அதற்குத் தான் எங்களதுஆதரவை அவர் கேட்கிறாரா?.
நவம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் தொடங்கும் கட்சியின் தலைமைக் குழு கூட்டத்தில் இது பற்றி விவாதிப்போம்எனறாலும், தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை இப்போதே நான் உறுதிபடுத்துகிறேன்.
காவிரி நதி நீரைப் பெறுவதற்காகத்தான் இத்தகைய கூட்டணியை தான் அமைக்க விரும்புவதாக ஜெயலலிதாகூறியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. காவிரி நீரைப் பெறுவது தொடர்பாக எந்த ஒரு முன் முயற்சியும் அவர்எடுக்கவில்லை.
எதிர்க் கட்சிகளுடன் இது பற்றி அவர் கலந்து ஆலோசிக்கவில்லை. மேலும் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையைத் தீர்பபதிலும் அவர் ஆர்வம் காட்டவில்லை.
மத்தியில் மூன்றாவது அணி அமைக்க அவர் முயல்வது தனது பிரதமர் பதவி ஆசையைத் தீர்த்துக் கொள்வதற்குமட்டும்தான். எனவே எந்தக் காரணம் கொண்டும் ஜெயலலிதாவின் இந்தக் கோரிக்கையை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது.
என்கெளன்டர் என்ற பெயரில் தமிழகத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விரிவான விசாரணைநடத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
நான் பிரதமராவேன்: லல்லு
இந் நிலையில் ஜோத்பூரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத்யாதவ் நானும் ஒரு நாள் பிரதமர் ஆவேன் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார்.
தான் பிரதமர் ஆவதற்காக லல்லுவுடனும் கூட்டணி சேர ஜெயலலிதா முயற்சித்து வரும் நிலையில், லல்லு தனதுபிரதமர் ஆகும் ஆசையை வெளிப்படுத்திவிட்டார்.
ஜெ.வின் பேச்சு வெறும் கனவு: திருநாவுக்கரசு
இது குறித்து ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர்திருநாவுக்கரசு,
மூன்றாவது அணி அமைப்பது என்பது வெறும் கனவாகும். காவிரி நதி நீர்ப் பிரச்சனை குறித்தோ, மூன்றாவதுஅணி அமைப்பது குறித்தோ ஜெயலலிதா பேசி வருவது, அவர் அரசியல் நடத்துவதற்கு வேண்டுமானால்உதவலாம். அதனால் தமிழகத்திற்கோ, நாட்டிற்கோ எந்தப் பயனும் இல்லை என்று கூறினார்.