நாடு திரும்பினார் ரணில்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றம் முடக்கப்பட்டு, பாதுகாப்பு, உள்துறை, செய்தித்துறை அமைச்சர்களின் பொறுப்பைஅதிபர் சந்திரிகா தன் வசம் எடுத்துக் கொண்டுள்ள நிலையில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேஅமெரிக்காவில் இருந்து நாடு திரும்பினார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் அவசியம், ஆனால்நாடாளுமன்றத்தையே முடக்கி வைத்தால் பேச்சுவார்த்தையை எப்படித் தொடங்க முடியும்.
விரைவில் நாடாளுமன்றத்தை மீண்டும் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுப்பேன். அதிபரின் நடவடிக்கையால்புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பெரும் ஆபத்தான கட்டத்தை அடைந்துள்ளன. நிலைமைய சரிசெய்து பேச்சுவார்த்தை தொடர நடவடிக்கை எடுப்பேன்.
அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஜப்பான், இந்தியா, நார்வே ஆகிய நாடுகள் என்னை அமைதிப்பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு வலியுறுத்தியுள்ளன என்றார்.
பின்னர் பண்டாரநாயகா விமான நிலையத்திலேயே மூத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை பிரதமர் சந்தித்தார்.இப்போதையே அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தார்.