பொடா வாபஸ் இல்லை: திருநாவுக்கரசர்
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
பொடா சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாது என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர்எஸ். திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடாதுஎன்று பா.ஜ.க. கோரி வருகிறது. ஆனால் தமிழகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொடா சட்டத்தின் கீழ்தேவையில்லாமல் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொடா சட்டம் பயங்கரவாதிகளைத் தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டது. எனவே இந்த சட்டத்தை வாபஸ்பெறும் பேச்சுக்கே இடமில்லை.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் வாஜ்பாயை, முதல்வர் ஜெயலலிதா சந்தித்து கோரிக்கை விடுத்து சுமுகத்தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications