பெங்களூர் வந்த என். ராமின் காரை வழிமறித்து தமிழக போலீஸ் சோதனை
பெங்களூர்:
பெங்களூரில் நடந்த இந்து பத்திரிக்கையின் 125-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த இந்துநாளிதழ் இணை நிர்வாக இயக்குநர் எச்.முரளியின் காரை நிறுத்தி தமிழக போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டனர். இதற்கு கர்நாடக போலீஸ் அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்து நாளிதழின் 125-வது ஆண்டு விழா பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஆசிரியர்ரவியைக் கைது செய்வதற்காக தமிழக போலீஸ் படை பெங்களூர் வந்திருந்தது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்து பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் என்.ராம், முரளிமற்றும் அவரது மனைவி தாரா உள்ளிட்டோர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒருஅம்பாசடர் கார் இவர்களது காரை வழிமறித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய 6 பேர் காரில் உள்ளவர்களை கீழேஇறங்கக் கூறினர்.
அவர்கள் அனைவரும் தமிழக போலீஸார் என்பதைப் புரிந்து கொண்ட முரளி, இது தமிழ்நாடு அல்ல, கர்நாடகம்என்று கோபத்துடன் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து இவர் ரவி அல்ல என்று கூறிய அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸில் முரளி புகார் கொடுத்தார். இச் சம்பவத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் இந்த நடவடிக்கையை சகித்துக் கொள்ள முடியாது. தமிழக போலீஸார்அத்துமீறி நடந்து கொண்டுள்ளனர். அந்த நபர்களையும், வாகனத்தையும் தேடி வருகிறோம்.
கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்வது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவதாக ஜெயலலிதா மனம்போன போக்கில் பேசுவது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றார் அவர்.
விஜயக்குமார் பதவி விலக வேண்டும்: என்.ராம்
இந் நிலையில் சென்னை பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேச வந்தஇந்து என்.ராம், முரளி மற்றும் அவரது மனைவி தாராவிடம் அத்துமீறி நடந்து கொண்ட சென்னை போலீஸாரின்நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று சென்னை மாநகர ஆணையர் விஜயக்குமார் பதவி விலக வேண்டும் என்றுகூறினார்.












Click it and Unblock the Notifications