மலேசியாவில் 8 தமிழர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்றுமாறு வைகோ கோரிக்கை
சென்னை:
பொய் வழக்கு போட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுமாறு மத்தியஅரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில்,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சத்தியேந்திரன், செல்வன், வரதராஜன், குணசேகரன், அபிமன்னன்,திருச்செல்வம், இளங்கோவன், சரவணன் ஆகிய 8 இளைஞர்களும் மலேசியாவில் கட்டுமானத் தொழில்செய்வதற்காக சென்றிருந்தனர்.
இவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு அருகே குடியிருந்து வரும் 2 மலேசிய இந்தியர்கள், போதைப் பொருள் பதுக்கிவைத்திருந்ததாக பிடிபட்டுள்ளனர். ஆனால் தங்களது செல்வாக்கை வைத்து, தமிழக இளைஞர்கள்தான் போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி பொய் வழக்கு போட வைத்து அவர்கள் தப்பி விட்டனர்.
பொய் வழக்குப் போடப்பட்ட தமிழக இளைஞர்களுக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்தஏப்ரல் மாதத்திலிருந்து இவர்கள் சிறையில் வாடி வருகிறார்கள். தங்களது நிலை குறித்து இந்தியத் தூதரகத்திற்குகோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
சில வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதகரகங்கள் இதுபோன்ற சமயங்களில் எந்தவித உதவியையும் செய்யாதுஅமைதியாக உள்ளன.
எட்டு தமிழக இளைஞர்களும் அப்பாவிகள், ஒரு தவறும் செய்யாதவர்கள், அவர்களது குடும்பங்கள் கண்ணீரில்மூழ்கியுள்ளன. தனிப்பட்ட முறையில் இந்த விஷயத்தில் தலையிட்டு எட்டு அப்பாவி இளைஞர்களின்வாழ்க்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications