For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பத்திரிக்கையாளர்களுக்கு ஆதரவாக வைகோ சிறையில் உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

இந்து மற்றும் முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீதான சட்டசபை நடவடிக்கையைக் கண்டித்து மதிக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 8 மதிமுகவினர் உண்ணாவிரதம்மேற்கொண்டுள்ளனர்.

இந்து, முரசொலி பத்திரிக்கையாளர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து சென்னை பிரஸ் கிளப் வளாகத்தில்பத்திரிக்கையாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு ஆதரவாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ உள்ளிட்ட 8 மதிமுகவினரும் பத்து மணிநேர உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். சங்கொலி பத்திரிக்கை ஆசிரியர் என்ற முறையில், வைகோஉண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக அக்கட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய முயலும் தமிழக அரசின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துமாறு பிரதமர் வாஜ்பாயிற்கு வைகோ கடிதம் எழுதியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X