மப்டி போலீஸ் தொல்லை: மத்தியப் படை பாதுகாப்பு கேட்கிறார் ராம்
சென்னை:
இந்து பத்திரிக்கை அலுவலகத்திற்கும், தமிழக அரசு கைது வாரண்ட் பிறப்பித்த 5 பத்திரிக்கையாளர்கள்வீட்டிற்கும் மத்திய் படைகளின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று இந்து தலைமை ஆசிரியர் ராம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இது தொடர்பாக துணைப்பிரதமர் அத்வானிக்கு அவர் கடிதம் எழுதவுள்ளார்.
தமிழக சட்டசபையின் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இன்றுசெய்தியாளர்களிடம் ராம் கூறியதாவது:
இந்து அலுவலகத்தின் எதிரேயும், எங்கள் நிருபர்களின் வீடுகளின் முன்பும் சாதாரண உடையில் ஏராளமானபோலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். எங்களின் ஒவ்வொரு அசைவயும் அவர்கள் கண்காணித்து வருகின்றனர்.எங்களை அச்சுறுத்தும் நோக்கத்திலேயே அவர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மப்டி போலீசாரின் நடவடிக்கைகள் நிருபர்களின் குடும்பத்தினரை மன உளைச்சலில் தள்ளியுள்ளது.
இதனால் இந்து அலுவலகத்துக்கும், கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட இந்து பத்திரிக்கையாளர்களின்குடும்பத்தினருக்கும் மத்தியப் படைகளின் பாதுகாப்பை மத்திய அரசு அளிக்க வேண்டும்
மேலும் இந்து பத்திரிகையாளர்களின் கார்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.பத்திரிகையாளர்களைக் கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள போதும் காவல் துறையின் கெடுபிடிதொடருகிறது. இது குறித்து துணைப் பிரதமர் அத்வானிக்கு விவரமாக கடிதம் எழுதுவேன்.
அதில், இந்து அலுவலகத்திலும், பெங்களூரில் எங்கள் குடும்பத்தினர் காரில் சென்ற போதும் தமிழக போலீசார்மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து முழு விவரத்தையும் விளக்கமாக எழுதுவேன் என்றார்.