நீதிமன்றத்தில் வைகோ, நிருபர்களிடம் போலீஸ் கெடுபிடி
பூந்தமல்லி:
பொடா வழக்கு விசாரணைக்கு வந்த வைகோ, நிருபர்களுக்குப் பேட்டியளிக்கக் கூடாது என்றும், வைகோ நீதிமன்றவளாகத்தில் சாப்பிடக் கூடாது என்றும் கூறி போலீஸார் கடும் கெடுபிடி செய்தனர்.
இந்து பத்திரிக்கை விவகாரத்தால் எல்லா நிருபர்களிடம் கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ள போலீசார் இன்றுபூந்தமல்லியில் நிருபர்களிடம் பாய்ந்தனர்.
பொடா வழக்கு விசாரணைக்காக வைகோ உள்ளிட்ட 8 பேர் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜேந்திரன் நாளை காலை 10.30க்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதையடுத்து வைகோவும் 8 மதிமுகவினரும் நீதிமன்ற வளாகத்தில் உணவருந்த முயன்றனர்.
அப்போது தலையிட்ட போலீஸார், வைகோ உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்ற வளாகத்தில் சாப்பிடத் தடை விதிக்கநீதிபதியிடம் கோரினர்.
அதற்கு நீதிபதி, நீதிமன்றத்திற்குக் கொண்டு வரும் வரைதான் அவருக்கு உங்களுடைய பாதுகாப்பு. அதன் பிறகுநீதிமன்றமே அவரது காவலுக்குப் பொறுப்பு. எனவே இதில் நீங்கள் தயிைைட முடியாது. வைகோ எப்போதும்போல் நீதிமன்ற வளாகத்தில் சாப்பிடலாம் என்றார்.
இதன் பின்னரே போலீசார் அமைதியாயினர்.
இதன்பிறகு வைகோவிடம் பேட்டி எடுக்க முயன்ற நிருபர்களைப் போலீஸார் தடுத்தனர். நிருபர்கள் யாரும்நீதிமன்ற கழிப்பறையைப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறினர். அதன் பிறகு நிருபர்கள் வைகோவின்வழக்கறிஞரிடம் கேள்விகளை எழுதிக் கொடுத்து வைகோவின் பதிலைப் பெற்றனர்.
நீதிமன்றத்தில் நிருபர்களின் மீது போலீஸார் விதித்துள்ள கட்டுப்பாடு பற்றி வைகோ கூறுகையில்,
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்த பிறகும் தமிழக அரசுக்குப் புத்தி வரவில்லை. தமிழகத்தில் அறிவிக்கப்படாதநெருக்கடி நிலை நிலவுகிறது. இதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணான்டசும் சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தில் நீதிபதிக்குத்தான் அதிகாரமே தவிர போலீஸீக்குக் கிடையாது என்றார்.
இந் நிலையில் நீதிமன்றத்தில் நிருபர்கள் வழக்கமாக நிற்கும் மரத்தின் கிளைகளைப் போலீஸார் வெட்டியுள்ளனர்.
-
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம்












Click it and Unblock the Notifications