For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆளுநரிடம் விளக்கம் கேட்கிறது மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிகள், அதைத் தொடர்ந்து இந்து மற்றும் முரசொலி ஆசிரியர்கள்,நிருபர்களைக் கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை, பரிதி இளம் வழுதியின் கைது, பெங்களூரில் இந்துபத்திரிக்கையின் ஆசிரியர் குடும்பத்தினரை தமிழக போலீசார் மிரட்டியது ஆகியவை குறித்து ஆளுநரிடம்அறிக்கை கேட்க பிரதமர் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.

டெல்லியில் தன்னைச் சந்தித்த திமுக, பா.ம.க எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏக்களிடம் வாஜ்பாய் இதனைச்தெரிவித்தார்.

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுமற்றும் துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அனைத்து திமுக எம்பிக்கள், எம்.எல்.ஏக்களும், பா.ம.க. தலைவர்மணி தலைமையிலான அக் கட்சி எம்.பி, எம்.எல்.ஏக்களும் மத்திய அமைச்சர் சண்முகமும் பிரதமர் வாஜ்பாயைச்சந்தித்தனர்.

அப்போது, தமிழக ஆளுநர் ராம்மோகன் ராவிடம் இது தொடர்பாக அறிக்கை கேட்பதாகவும் அதன் பின்னர்உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X