முல்லைவேந்தன் விடுதலையை எதிர்த்து வழக்கு
சென்னை:
இந்து அறநிலையத்துறை அதிகாரி மீதான தாக்குதல் வழக்கில் ணின்னாள் திணிக அமைச்சர் ணில்லைவேந்தன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சிபிசிஐடி போலீஸார் உயர்நீதிமன்றத்தில் மேல் ணிறையீடு செய்துள்ளனர்.
தர்மபுரியில் உள்ள கோவில் நிலத்தை ஏலம் விடுவதில் நடந்த முறைகேடு தொடர்பாக அப்போதைய அமைச்சர் முல்லைவேந்தனிடம், தர்மபுரி இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்பு மணி என்பவர் புகார் செய்யச் சென்றார்.
அப்போது அமைச்சரும், இன்னும் சிலரும் அன்புமணியை தாக்கியதாகவும், தரக்குறைவாகப் பேசியதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தர்மபுரி முதலாவது ஜூடிசியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முல்லைவேந்தன் மற்றும் 10 பேர் மீதான புகார்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்களை விடுதலை செய்வதாக கடந்த ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
தற்போது இந்த விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி சொக்கலிங்கம், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications