முதுமலை முகாம்: கோயில் யானைகள் லாரிகளில் ஏறாமல் பிடிவாதம்
மதுரை:
யானைகள் லாரியில் ஏறுவதற்கு மறுத்து வருவதால் வரும் 16ம் தேதி முதல் முதுமலையில் நடைபெறவிருக்கும்யானைகள் முகாம் திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 71 கோயில் யானைகளுக்கு முதுமலை வனப்பகுதியில் சுகாதார முகாம் நடத்த தமிழக அரசுமுடிவு செய்தது. இதையடுத்து அனைத்து கோயில்களும், 16 தேதிகளுக்குள் தங்களது யானைகளை லாரிகளில்ஏற்றி முதமலைக்கு அனுப்ப வேண்டும் உத்தரவிடப்பட்டது.
இந் நிலையில் பல்வேறு கோவில்களிலும் லாரிகளில் ஏறுவதற்கு யானைகள் மறுத்து வருகின்றன. கடலை மிட்டாய்உருண்டைகள், கரும்புக் கட்டு, வாழைப்பழம் என எதைக் கொடுத்தும் யானைகளை மசிய வைக்க முடியவில்லை.
யானைகளை அடிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதால், யானைப் பாகன்களின் வாய்மொழி உத்தரவுக்குயானைகள் அடிபணிய மறுப்பதாக கோயில் நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
திருப்பரங்குன்றத்தில் உள்ள யானை மட்டும் மலைகளில் ஏறிப் பழக்கமுடைய யானைகள் என்பதால் அவைலாரியில் ஏற்றுவதற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஆனால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்படதமிழகத்தின் பெரும்பலான கோவில் யானைகளை லாரிகளில் ஏற்றுவதில் அதிகாரிகளுக்கு பெரும் சிரமம்ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர்கள் கலங்கிப் போயுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் யானைகளை லாரியில் ஏற்றதனி மேடை அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் முயன்றும் யானைகளை ஏற்ற முடியவில்லை.யானைகளை தேவையில்லாமல் துன்புறுத்துவதாகவும் சில பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதே நிலை தான் மற்றகோவில்களிலும் நிலவுகிறது.
தனது தோஷ நிவர்த்திற்காகவே கஜமுக பூஜை நடத்த, யானைகளை வரவழைக்க முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications