For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதிய தலைமை செயலகத்துக்கு எதிராக முன்னாள் பொதுப் பணித்துறை பொறியாளர் வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளதை எதிர்த்து, தமிழகபொதுப் பணித்துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் குப்புராஜ் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது.இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்து பொதுப் பணித்துறைமுன்னாள் தலைமைப் பொறியாளர் குப்புராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ள இடம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ளது.ஆசியாவிலேயே மிகப் பழமையான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அருகில் இவ்வளவு பெரிய அலுவலகவளாகம் கட்டினால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும்.

இவ்வளவு செலவில், இவ்வளவு பெரிய கட்டடம் கட்டப்படுவதால் இப் பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும்.எனவே சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து முறையாக ஆய்வு நடத்திய பின்னரே, இதைக் கட்டுவது குறித்து அரசுமுடிவெடுக்க வேண்டும்.

முறையான ஆய்வு நடத்தாமல், மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றியும் கவலைப்படாமல் புதிய தலைமைச்செயலகம் கட்டப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X