For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கல்லணையில் குதித்த 3 பேர் சாவு; 2 பேர் மீட்பு!

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

கடன் தொல்லை காரணமாக குடும்பத்தோடு கல்லணையில் குதித்த 5 பேரில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர்உயிரோடு மீட்கப்பட்டனர்.

திருச்சி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாரி. இவர் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்தார். ஏராளமான பேரிடம் பாரிகடன் வாங்கியிருந்தார். இந்தக் கடனைக் கொடுத்தவர்கள், பாரி இறந்தவுடன், அவரது மனைவி சந்திராவைஅணுகி உடனடியாகக் கடனை அடைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் சந்திரா என்ன செய்வது என்றுதெரியாமல் விழித்தார்.

இந் நிலையில் மகள்கள் ராஜலட்சுமி, துர்கா, மாலதி மற்றும் மகனுடன் கல்லணைக்குச் சென்ற அவர் குழந்தைகளைஅணையில் தள்ளி விட்டார். பின்னர் தானும் குதித்தார். இதைப் பார்த்து பதறிப்போன அணைக்கு அருகில்இருந்தவர்கள் உடனடியாக அணைக்குள் இறங்கி குதித்தவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

இதில் ராஜலட்சுமி மற்றும் மாலதி ஆகியோர் மட்டுமே உயிரோடு மீட்கப்பட்டனர். மற்ற 3 பேரும் கிடைக்கவில்லை.அவர்கள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X