குக்கிராமத்திற்கு ஜெ. திடீர் விசிட்!!
வண்டலூர்:
சென்னை வண்டலூர் அருகே உள்ள குக்கிராமமான கேளப்பாக்கத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா திடீர் விசிட்அடித்தார். அங்கு நடைபெறவுள்ளஅதிமுக சிறப்பு முகாம் ஆயத்த வேலைகளைப் பார்வையிட்டார்.
மாவட்ட வாரியாக மெகா ஆலோசனைக் கூட்டம் நடத்தி கட்சியினரை லோக்சபா தேர்தலுக்கு தயார்படுத்தஜெயலலிதா முடிவெடுத்துள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வண்டலூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கேளப்பாக்கம் என்ற கிராமத்தில்சிறப்பு முகாம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகளைப் பார்வையிட ஜெயலலிதா திடீர் விசிட் அடித்தார். அவருடன் தோழி சசிகலா, அமைச்சர்கள்பொன்னையன், பன்னீர் செல்வம், ஜெயக்குமார், நயினார் நாகேந்திரன் ஆகியோர் சென்றனர். அடுத்த மாதம் முதல்வாரத்தில் தொடங்கும் இக் கூட்டம் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
இந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்ட ஜெயலலிதா அருகே ஊமைச்சேரியில் உள்ள 70 ஏக்கர் நிலத்தையும்பார்வையிட்டார்.
ஜெயலலிதாவின் இந்த திடீர் விசிட் போலீஸாருக்கே கூட கடைசி நிமிடத்தில் தான் தெரிவிக்கப்பட்டது.