இந்து- தமிழக அரசு மோதல் சுமூகமாகத் தீர்க்கப்படும்: அத்வானி
சென்னை:
இந்து, முரசொலி பத்திரிக்கைகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றம் எடுக்க முனைந்த நடவடிக்கைகள், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்படும் என நம்புவதாக துணைப் பிரதமர் அத்வானிகூறினார்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கணிப்பொறி மின் ஆளுமை குறித்த 7 வது தேசிய மாநாடுஇன்று தொடங்கியது. இந்த மூன்று நாள் மாநாட்டை அத்வானி இன்று காலை தொடங்கி வைத்தார். இதற்காகஅவர் தனி விமானத்தில் சென்னை வந்தார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தின் நடவடிக்கைகளில்மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால், பத்திரிக்கைகள் மற்றும் தமிழக அரசுக்கு இடையே ஏற்பட்டுள்ளபிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.
பின்னர் தனி விமானத்தில் அவர் டெல்லி திரும்பினார்.
இந்து விவகாரத்துக்குப் பின் அத்வானியும் முதல்வர் ஜெயலலிதாவும் சந்தித்துக் கொள்வது இதுவேமுதல்முறையாகும்.