கர்நாடகாவில் காவிரி நீரை மோட்டார் வைத்து உறிஞ்ச திட்டம்
பெங்களூர்:
காவிரி உள்ளிட்ட கர்நாடக நதிகளில் செல்லும் நீரை மோட்டார்கள் மூலம் உறிஞ்சி ஏரிகளை நிரப்பும் திட்டத்தைசோதனை முயற்சியாக ஹவேரி மாவட்டதில் அம் மாநில அரசு துவக்கியுள்ளது.
இது குறித்து கர்நாடக குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் கோலிவாட் பத்திரிக்கையாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் கடந்த 3 வருடங்களாக வறட்சி நிலவி வருவதையடுத்து இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காவிரி உள்ளிட்ட எல்லா பெரிய மற்றும் சிறிய நதிகளில் 15 மீட்டர் தூரத்தில் மோட்டார் வைத்து நீரைஉறிஞ்சி அருகில் உள்ள ஏரி மற்றும் குளங்களில் நிரப்பப்படும். சோதனை முயற்சியாக முதலில் துங்கபத்ரா நதியில்இத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நதியில் உறிஞ்சப்படும் நீர் ரானேபென்னூர் தாலுகா மேட்லேரி ஏரியில் நிரப்பப்படும். படிப்படியாக இத்திட்டம் காவேரி, கிருஷ்ணா உட்பட பல நதிகளில் அமுல்படுத்தப்படும். இவ்வாறு உறிஞ்சப்படும் நீர் குடிநீருக்குமட்டும் பயன்படுத்தப்படும். மிச்சமிருந்தால் பாசனத்துக்கும் வழங்கப்படும் என்றார்.
இதனால் காவிரி நீர் அணைக் கட்டுக்குச் செல்லும் முன்னரே உறிஞ்சப்பட்டு ஏரிகளில் நிரப்பப்பட்டுவிடும்.அணைக் கட்டுகளில் உள்ள நீரைக் கணக்கில் வைத்துத் தான் தமிழகத்துக்கு இவ்வளவு நீர் தர வேண்டும் எனகாவிரி கண்காணிப்புக் குழு அவ்வப்போது உத்தரவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.