For Daily Alerts
Just In
சத்துணவுடன் கறிவேப்பிலை, முருங்கை இலை பொடி வழங்க ஜெ. உத்தரவு
சென்னை:
வைட்டமின் குறைபாட்டைத் தடுப்பதற்காக பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவில் கறிவேப்பிலைப் பொடி மற்றும்முருங்கை இலைப்பொடியைச் சேர்த்து வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேலும் இந்தப் புதிய திட்டத்தை தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவே தொடங்கி வைத்தார்.
இத் திட்டத்தின்படி மாநிலத்தில் 3 முதல் 5 வயதுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் அங்கான்வாடி மையங்களில்நாளொன்றுக்கு 2 கிராம் வீதம், வாரத்தில் 5 நாள்கள் கறிவேப்பிலைப் பொடி அல்லது முருங்கை இலைப் பொடிசத்துணவுடன் வழங்கப்படும்.
இதன்மூலம் 35,000 குழந்தைகள் பயன் பெறுவர். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் செயல்படும்பெண்கள் சுய உதவிக் குழுக்கள் இப் பொடிகளைத் தயாரித்து அங்கான்வாடி மையங்களுக்கு வழங்கும்.
கறிவேப்பிலை, முருங்கை இலைகளில் உள்ளபீட்டா கரோட்டின் குழந்தைகளுக்குத் தேவையான சக்தியைஅளிக்கவல்லது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran secretariat electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Thursday, November 13, 2003, 5:30 [IST]