ராமுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு: தமிழக போலீசுக்கு மத்திய அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்து தலைமை ஆசிரியர் என்.ராமுக்கு வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மேம்படுத்தி ஒய் பிரிவுபாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ராமின் கோரிக்கையை ஏற்று இந்து அலுவலகத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின்பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சகம் வாபஸ் பெற்றுக் கொண்டது.

இந் நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்றிரவு 8 மணியளவில் மத்திய உள்துறை இணைச் செயலாளர் ஹர்மிந்தர் சிங்கிடம் இருந்து தமிழக அரசுக்குஒரு கடிதம் வந்தது. அதில், இந்து அலுவலகத்துக்கு மத்தியப் படை பாதுகாப்பு வழங்கும் முடிவு வாபஸ்பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

முன்னதாக மாலை 4 மணிக்கு அதே அதிகாரியிடம் இருந்து வந்த கடிதத்தில் மத்தியப் படை பாதுகாப்புவழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் ராமுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறுகூறப்பட்டிருந்தது.

பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் யூகங்களின் அடிப்படையில் செய்திகள் போட்டு வருவதால் தான் இந்தஅறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என தனது அறிக்கையில் பிரானேஷ் கூறியுள்ளார்.

இந் நிலையில் ராமின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுவிட்டதாகவும், அவருக்கு இப்போது ஒய் பிரிவு பாதுகாப்புத்தரப்படுவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எல்.டி.டி.ஈயால் ஆபத்து இருப்பதாக அவருக்குஏற்கனவே எக்ஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+