திருச்சியில் பஸ்கள் மோதல்: 7 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
![]() |
திருச்சி:
திருச்சியில் அரசு பஸ்சும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 7 பேர் பலியாயினர். 34 பேர்படுகாயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து ஒரு அரசு பஸ் திருப்பத்தூர் சென்றது. அதே போல காரைக்குடியில் இருந்து ஒரு தனியார்பேருந்து திருச்சி வந்து கொண்டிருந்தது.
திருச்சி விமான நிலையம் அருகே இரு பஸ்களும் நேருக்கு நேர் படு வேகத்தில் மோதிக் கொண்டன. இருபஸ்களும் ஒன்றுக்குள் ஒன்று புகுந்தன.
இதனால் முதல் 6 இருக்கைகள் வரை இரு பஸ்களிலும் நசுங்கின. அதில் பயணம் செய்த 7 பேர் அந்தஇடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். 34 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 32 பேர் திருச்சி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் புதுக்கோட்டை மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications