முதுமலையில் ஒய்வு: லாரியில் கொண்டு செல்லப்பட்ட யானை கீழே குதித்து படுகாயம்
கோவை:
முதுமலையில் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள யானைகள் முகாமுக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஒரு குட்டியானை தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தது.
தமிழக கோவில்களைதச் சேர்ந்த 41 யானைகளுக்கு ஒரு மாத காலம் ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றைமுதுமலைக்குக் கொண்டு வர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்தோடு தனியார் யானைகள் 40ம் அங்குகொண்டு செல்லப்படவுள்ளன. மொத்தம் 81 யானைகள் (கூட்டுத் தொகை ஜெயலலிதாவுக்கு ராசியான 9) இந்தமுகாமில் பங்கேற்க உள்ளதாகத் தெரிகிறது.
முதல்வர் ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடத்தவே இந்த முகாம் நடத்தப்படுவதாக எதிர்க் கட்சிகள் புகார் கூறிவருகின்றன. இந் நிலையில் லாரிகளில் ஏறாமல் பல கோவில்களின் யானைகள் முரண்டு பிடித்து வருகின்றன.
இதற்கிடையே கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் யானையான லட்சுமி, முதுமலைகொண்டு செல்லப்படுவதற்காக (வயது5) லாரியில் ஏற்றப்பட்டது. அவினாசி ரோட்டில் வந்தபோது மிரண்டுபோன அந்த யானை லாரியில் இருந்த தடுப்புக் கட்டைகளை உடைத்துக் கொண்டு கீழே தாவியது.
இதில் யானைக்கு பல இடங்களில் காயம் ஏற்பட்டது.