திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்கிறார் அப்துல் கலாம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
நவம்பர் 20ம் தேதி திருப்பதிக்கு வரும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், வெங்கடேசப் பெருமாளை தரிசனம்செய்ய உள்ளார்.
ஒரு நாள் பயணமாக அவர் திருப்பதிக்கு வருகிறார். முதல் வேலையாக தரிசனத்தை முடித்து விட்டு,வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் பொன் விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார்.
ஆந்திர மாநில கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இவ் விழாவில் கலந்துகொள்கின்றனர்.
அதன் பிறகு இந்திய பல்கலைக்கழகங்களின் 78வது மாநாட்டிலும் கலாம் கலந்து கொள்கிறார். அப்போது 150பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுடன் அவர் கலந்துரையாடுவார்.
சமீபத்தில் சந்திரபாபு நாயுடு மீதி திருப்பதியில் நக்சல்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலைக் கருத்தில் கொண்டுதற்போது அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications