இலங்கை அமைதி முயற்சிகளில் இருந்து நார்வே திடீர் விலகல்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் தங்களது அரசியல் கருத்து வேறுபாடுகளைநீக்கிக் கொள்ளும் வரை, அமைதிப் பேச்சு முயற்சிகளில் இருந்து விலகிக் கொள்வதாக நார்வே நாடுஅறிவித்துள்ளது.

மேலும் சந்திரிகாவுடனான அரசியல் மோதல் காரணமாக அமைதி முயற்சிகளில் இருந்து ரணிலும் விலகிக்கொண்டுவிட்டதாக நார்வே கூறியுள்ளது.

நார்வேயின் இந்த திடீர் அறிவிப்பு இலங்கை அமைதி முயற்சிகளுக்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது.

நேற்று முன் தினம் ரணிலையும், நேற்று புலிகளின் தலைவர் பிரபாகரனையும் நேரில் சந்தித்துப் பேசிய நார்வேதுணை வெளியுறவு அமைச்சர் விடார் ஹெல்ஜெசன் இன்று இந்த முடிவை அறிவித்தார்.

கொழும்பில் நிருபர்களிடம் பேசிய அவர், நாங்கள் நார்வேவுக்கு திரும்பப் போகிறோம். இப்போது இலங்கையில்நிலவும் அரசியல் சூழலில் அமைதிப் பேச்சைத் தொடர்வது சாத்தியமே இல்லை. அமைதி முயற்சிகளுக்குகொழும்பில் யார் பொறுப்பு என்பது தெளிவாகாமல் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவம் செய்ய எங்களால்இயலாது.

நாளையே கூட பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும். ஆனால், அதிபர் சந்திரிகா எடுத்த நடவடிக்கைகளால்எல்லாவிதமான வாய்ப்புக்களும் முடங்கிவிட்டன.

பாதுகாப்பு, போலீஸ்துறை ஆகியவற்றை அதிபர் எடுத்துக் கொண்டதால், அமைதி முயற்சிகளில் எந்தவிதமானமுடிவுகளும் எடுக்க முடியாத நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உள்ளார். அவரால் எந்த உத்தரவாதமும்கூட கொடுக்க இயலாத நிலையில் உள்ளார் என்றார்.

கடந்த 2002ம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவும், அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் மிக முக்கிய பங்கு வகித்தது நார்வே என்பதுகுறிப்பிடத்தக்கது.

அமைதிப் பேச்சுக்கள் தொடர்பாக ரணிலோடு, நார்வேயையும் சேர்த்து சந்திரிகா குறை கூறி வருகிறார் என்பதும்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+