படம் தயாரிக்க பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தயாரிப்பாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பாதியில் நின்று போன தனது படத்தை முடிக்க, பணம் திரட்டுவதற்காக, கல்லூரிப் பெண்களை வைத்து விபச்சாரத்தொழில் செய்த பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார். அவருடன்கேரளக் கல்லூரி மாணவியும் கைதானார்.

கேரளத்தைச் சேர்ந்தவர் சினிமா தயாரிர்பாளர் பாபுராஜ். இவர் மலையாளத்தில் ‘அத்வைதம்’, ‘மக்கள்மஹாத்மியம்’, ‘தபஸ்தானம்’ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். ‘நிறங்கள்’ என்ற படத்தைத் தயாரித்துவந்தார். ஆனால், பணமில்லாமல் தயாரிப்புப் பணி தடைபட்டது.

இதையடுத்து படத் தயாரிப்புக்குப் பணம் திரட்ட கேரளத்தில் இருந்து கல்லூரி மாணவிகளை சென்னைக்குஅழைத்து வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இதற்காக சென்னை சூளைமேடு பகுதியில் சினிமாதயாரிப்பு அலுவலகம் ஒன்றையும் துவக்கினார்.

அதில் வைத்து விபச்சாரம் நடத்தி வந்தார். இது பற்றி விபச்சார தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு வந்ததகவலையடுத்து, போலீஸார் வாடிக்கையாளர் போல் சென்று பாபுராஜிடம் சென்று பேசினர். பாபுராஜ் கேட்ட ரூ.10,000த்தை போலீஸார் கொடுத்தனர்.

இதையடுத்து அவர்களுக்கு காவ்யா (வயது 20) என்ற கல்லூரி மாணவியைக் காட்டி, அவருடன் உல்லாசமாகஇருக்குமாறு கூறினார் பாபுராஜ். இதையடுத்து போலீஸார் பாபுராஜைக் கைது செய்தனர். காவ்யாவும் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கேரளாவைச் சேர்ந்த கல்லூரி ஒன்றில் படித்துவரும் மாணவி என்று தெரியவந்தது.

இது போல பல கேரளப் பெண்களை வைத்து பாபுராஜ் தொழில் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.மேலும் படத்தில் நடிக்க சான்ஸ் கேட்டு வரும் பெண்களையும் இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.அவர்களிடம் புகார் வாங்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+