For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒயின் ஷாப் வேலையில் சேர வந்த பெண்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & ராமநாதபுரம்:

அரசு நடத்தவுள்ள மதுக்கடைகளில் வேலை தரக் கோரி ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தைபெண்கள் முற்றுகையிட்டனர். மதுக் கடைகளில் வேலை பார்க்கவும், ஊற்றித் தரவும் தாங்கள் தயார் என அவர்கள்தெரிவித்தனர்.

அரசு மதுக்கடைகளுக்கு 22,000 ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. அரசுஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது தற்காலிக ஊழியர்களாகத் தேர்வு செய்யப்பட்ட 15,000 பேரை இந்தமதுக்கடைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அரசு விரும்புகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 500 பேர் வீதம் உள்ள தற்காலிகப் பணியாளர்கள் விரும்பினால் மதுக்கடைவேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசு வேலைக்கு வந்த தங்களை மதுக்கடைவேலைக்கு போகுமாறு அரசு கூறுவதால் இந்த தாற்காலிக ஊழியர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இது தவிர அரசு மதுக்கடைகளுக்குத் தேர்வு செய்யப்படுவர்கள், மேற்பார்வையாளர் பதவிக்கு ரூ.50,000மும்,விற்பனையாளர் பதவியில் சேருபவர்கள் ரூ.15.000மும் டெபாஸிட் செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.இதற்கு யாரும் முன் வராததால் ரூ. 5 லட்சத்துக்கு சொத்து மதிப்பை ஜாமீனாகக் காட்டி பணியில் சேரவாம் என்றுஅறிவித்துள்ளது.

தங்கள் பெயரில் எங்கிருந்து ரூ. 5 லட்சத்துக்கு சொத்து மதிப்பைக் காட்டுவது என்று தற்காலிக அரசு ஊழியர்கள்கலங்கிப் போயுள்ளனர்.

இந் நிலையில் மதுக்கடைகளில் வேலை செய்யத் தயார் என்று ராமநாதபுர மாவட்ட வேலை வாய்ப்புஅலுவலகத்தில் பெண்கள் விண்ணப்பித்தனர். மதுக்கடைகளில் ஊற்றித் தர, மிக்ஸ செய்து தரவும் நாங்கள் தயார்என்று இவர்கள் கூறினர்.

ஆனால், இது ஆண்களுக்கான வேலை என்று அதிகாரிகள் இவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X