போலி வாக்காளர்களை சேர்க்க அதிமுக சதி: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை:
வரும் மக்களவைத் தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடவும், கள்ள ஓட்டுக்கள் போடவும் அதிமுகதிட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடக்கும்போது போலி வாக்காளர்களைச் சேர்க்க திமுகதிட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அதிமுகவினருக்கு அவர்எழுதியுள்ள கடிதத்தில், திமுகவின் இந்த முயற்சியை முறியடிக்குமாறு கூறியுள்ளார்.
இதற்கு பதிலடியாக ஜெயலலிதா தேர்தல் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கருணாநிதி குற்றம்சுமத்தியுள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
போலி வாக்காளர்களைச் சேர்க்க திமுக திட்டமுட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். பிறரையும் அவர்தன்னைப் போலவே நினைத்துக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.
டான்சி வழக்கில், வாங்கப்பட்ட சொத்து குறித்து நீதிமன்றத்தில் மாறி, மாறி பேசிய ஜெயலலிதாவுக்குஅடுத்தவரைப் பற்றிக் குறை கூற என்ன அருகதை இருக்கிறது.
தேர்தலில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது, போலி வாக்காளர்களை சேர்ப்பது, கள்ள ஓட்டு போடுவது,முறைகேடுகளில் இறங்குவது, வாக்காளர்களை மிரட்டுவது இதெல்லாம் அதிமுகவினருக்கு கை வந்த கலை.
வரும் தேர்தலில் மீண்டும் இந்தச் செயல்களில் அதிமுகவினரை இறக்கிவிட ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். மேலும்போலி வாக்காளர்களைச் சேர்க்கவும் அதிமுகவால் சதித் திட்டம் போடப்பட்டுள்ளது.
அதிமுகவின் இந்தச் சதிச் செயலை முறியடிக்க திமுகவினர் இப்போதிருந்தே செயல்பட ஆரம்பித்தால் வரும்மக்களவைத் தேர்தலில் திமுக பெறும் வெற்றி பெரும்.
யானைகள் முகாம் என்ற பெயரில் யானைகளைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்த அரசு என்றார்கருணாநிதி.