சென்னைக்கு குடிநீர்: நாயுடுவுக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சென்னையில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையிலிருந்து 3டி.எம்.சி. தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, முதல்வர்ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னையில் கடும்குடிநீர்ப் பஞ்சம் நிலவி வருகிறது. தற்போது மிகவும் மோசமான நிலை உள்ளது.
சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. அடுத்த மாதம் பாதிவரை மட்டுமே இந்த நீரை பயன்படுத்த முடியும்.
சென்னைக்கு, தெலுங்கு- கங்கை திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக முறைப்படி தண்ணீர்கிடைக்கவில்லை. கண்டலேறு அணையிலிருந்து 3 டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கடந்தமார்ச் மாதம் தமிழகம் கோரியது.
ஆனால் கண்டலேறு-பூண்டி இணைப்புக் கால்வாய் பணிகள் முடியாததைக் காரணம் காட்டி அதை ஆந்திர அரசுநிராகரித்து விட்டது. தற்போது இந்தப் பணிகள் முடிவடைந்து விட்டன. எனவே கண்டலேறு அணையிலிருந்து 3டிஎம்சி தண்ணீரை எடுத்துக் கொள்ள தமிழகத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
சென்னை மக்களுக்கு குறைந்தபட்ச குடிநீரையாவது கொடுப்பதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications