மேலூரில் பீரங்கி குண்டு வெடித்து ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை அருகே மேலூரில், பழைய துருப்பிடித்த பீரங்கிக் குண்டை கேஸ் கட்டர் மூலம் பிளக்க முயற்சித்தபோது,அது வெடித்து ஒருவர் பரிதாபமாக பலியானார்.
மதுரை, மேலூரில் பழைய இரும்புக் கடை வைத்திருப்பவர் காதர் மொய்தீன். இவரது கடைக்கு ஒரு பழையஇரும்புக் குண்டு எடைக்குக் கிடைத்தது. அது என்னவென்று அறியாத காதர் மொய்தீன், கேஸ் கட்டர் மூலம்குண்டை உடைக்க முடிவு செய்தார்.
நேற்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது, அந்த குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில்,கடைக்கு உள்ளே நின்று கொண்டிருந்த அப்துல்லா என்ற வேன் டிரைவர் பரிதாபமாக இறந்தார். காதர் மொய்தீன்உள்ளிட்ட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கேஸ் கட்டரால் பிளக்க முயன்றது துருப்பிடித்த பீரங்கிக் குண்டு என்று போலீஸார் கூறியுள்ளனர். இது எப்படி காதர்மொய்தீன் கடைக்கு வந்தது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications